Thursday, May 29, 2014

தொடக்கமும் முடிவும்!

தொடக்கமும் முடிவும்!

இதை கேட்டுட்டு போங்களேன்!





அன்றொருநாள் மழை
பொழியும் போது
அப்படி தான்,
நேற்று இரவு
இரண்டு மணிக்கு
ஒரு தடவை,
வெளியூர் பயணங்களின்
போது இன்னும் சிக்கல்,
விவஸ்தையே இல்லாத
காதல் கண்ட நேரத்தில்
வந்து தொலைக்கிறது

*****************

அவள் உதட்டால்
என் கன்னத்தில்
கொடுத்த அடி
இன்னும் ஆறாமல்
இனிக்கிறது.

***************

கத்தி காயத்தை
விட உயிர் போகும்
வேதனையை தருவது
“பிடிக்கல”
என்ற வார்த்தை!

***************

மரணம் கூட
இனிமை தான்
உன் நினைவோடு
சாவதென்றால்!

****************

உன் நினைவு
வரும்பொழுதெல்லாம்
ஏகாந்த வாசம்
என்னை சூழ்கிறது,
அது மரணவாயிலின்
காலிங்பெல்லாம்
இறந்துபோன
நண்பனொருவன்
சொன்னான்!

****************


இதுக்கு தான் சொல்றது ”ஆணியே புடுங்க வேணாம்”