Saturday, November 23, 2013


என்ன வித்தியாசம்..?

கதைக்கும்
கவிதைக்கும்
என்ன வித்தியாசம்..?
நான் பேசினால்
அது கதை..!
நீ பேசினால்
அது கவிதை..! 

கண்கள் பேசுமா..?



கண்கள் பேசுவதை
எங்கும் நான்
கண்டதில்லை பெண்ணே..!
உன் கண்களை
நான் சந்திக்கும் வரை..!

* * * * *


நான் உற்சாகம் இழந்து
வீழும் போதெல்லாம்
உன்னை நினைத்தாலே போதும் கண்ணே..!
எனக்குள் உற்சாகம்
தானாக வந்துவிடும்..!
என் உடலுக்குள் புது வேகம்
பிறந்து விடும்..!

* * * * *

பூமி தன்னைத்தானே
சுற்றியபடி
சூரியனையும் சுற்றிக்
கொண்டிருப்பது போல…
என் உடல் இங்கே சுற்றினாலும்
என் மனசு எப்பொழுதும்
உன்னைத்தான்
சுற்றிக் கொண்டிருக்கிறது..!

* * * * *

உன் நாவில்
தேனூறுகிறதா என்ன..?
நீ பேசுவதைக் கேட்டாலே
என் காதுகளிரண்டும்
இனிக்கின்றனவே..!

* * * * *

உன் பெற்றோர்களே உனை
ஒரு ஓவியமாய் தீட்டியிருக்கும் போது..!
கவிஞனான நான் உன்னைப் பற்றி
என் மனதிற்குள் பெருங்காவியமே
தீட்டி வைத்திருக்கிறேன்...
நீ வந்து படித்துப் பார்ப்பாய் என..!

* * * * *

ஒரு பூக்கூடையே
பூ வாங்க வருவது
போலிருக்கிறது..!
நீ... பூ வாங்க
வரும் அழகு..!

* * * * *

உன்னோடு சேர்ந்து நடப்பதென்றால்..!




உன்னோடு சேர்ந்து நடப்பதென்றால்
கடும் காடு மலை என்ன..?
சுடும் பாலைவனத்தில் கூட
நடந்து வருவேன்..!
உன் பூப்பாதங்களை தாங்கியபடி..! 

ஏதாவதொரு கவிதை சொல்..!





அலைபேசியில் அழைத்து
‘என்னைப்பற்றி
ஏதாவதொரு கவிதை சொல்…
அதுவும் இப்போதே சொல்லென்கிறாய்..!’
உன் அழகிய புன்சிரிப்பும்
ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த
உன் வெண்ணிலவு வெட்கமும்
ஆயிரமாயிரம் கவி சொல்லும் போது
பிறிதொரு கவிதை எதற்குப் பெண்ணே..!

இதழ் விரிந்தால்..!





பூக்களின் இதழ்
விரிந்தால்
புன்னகை மலரும் ..!
பூவிலிருந்து மணம்
விரிந்தால்
முகமே மலரும்..!
பூவினமே உன் இதழ்
விரிந்தால்
என் வாழ்வே மலருமடி ...!

எனை என்ன செய்தாய் பெண்ணே..?





என் அலைபேசி ஒலிக்கும் போதெல்லாம்
நீதான் அழைக்கிறாய்
என ஓடோடி வருகிறேன்..!
குறுந்தகவல் வரும்போதெல்லாம்
குறும்புக்காரி நீதான் அனுப்பினாய்
என ஆவலோடு ஓடி வருகிறேன்..!
நீ இல்லை என்று தெரிந்ததும்
வாடிப் போகிறேன்..!
இப்படி யார் அழைத்தனுப்பினாலும்
எனக்கு நீ அழைத்தனுப்புவதாகவே தோன்றுகிறது…
எனை என்ன செய்தாய் பெண்ணே..! 

மீண்டும் மீண்டும்..!



உன் அழகிய புன்னகை கூட
எனை அடியோடு
வெட்டி வீழ்த்துகிறது..!
அப்படி நான் ஆயிரம் முறை
அடியோடு வீழந்தாலும்...
அந்த வசீகரப் புன்னகைக்காகவே
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறேன்..!

நீ தீட்டிய மையினால்...




அஞ்சன மை தீட்டிய
அழகு தேவதையே…
நீ தீட்டிய மையினால்
உன் கண் மயங்கியதோ..?
இல்லையோ..?
நான் மயங்கி விட்டேன்..! 

உலகின் மிகச் சிறந்த சிற்பிகள்..!




இந்த உலகின்
மிகச்சிறந்த
சிற்பிகள் யார்..?
என்று போட்டி வைத்தால்
முதல் பரிசு
உன்னுடைய
பெற்றோர்களுக்குத்தான்
பெண்ணே..! 

இதழ்கள் என்றாலே..!





இதழ்கள் என்றாலே
எனக்கு என்றுமே
புத்துணர்ச்சிதான்..!
எழுத்துக்களைப் படிக்கத் தரும்
இதழ்களானாலும் சரி..!
அந்த எழுத்துக்களைப்
படித்துத் தரும்
உன் இதழ்களானாலும் சரி..! 

பேசவே முடியவில்லையடா..!




உன்னிடம் என்னால்
பேசவே முடியவில்லையடா..!
எப்படிப் பேசினாலும்
உன் பேச்சால்
எனை மடக்கி விடுகிறாய்..!
என பொய்க் கோபம் காட்டும்
என் பொன் மணியே...
என்னதான் நானுனை
பேச்சினில் மடக்கினாலும்...
எனை உன் ஓரேயொரு
ஓற்றைப் பார்வை மடக்கி விடுகிறதே..!
அதற்கு முன்பு என் பேச்சொன்றும்
பிரமாதமில்லையடி..! 

செல்லக் கோபமா..? செல்லாக் கோபமா..?




நான் என்ன பொய் சொன்னாலும்
அதை அப்படியே
நம்பிவிடுகிறாயே அது ஏன்..?
உனக்கு அழகில்லை என்றேன்...
உனக்கு அறிவில்லை என்றேன்...
கோபக்காரி நீ என்றேன்...
அத்தனைப் பொய்களையும்
அமைதியாய்க் கேட்டுவிட்டு
'ஆமாம்.. நான் அப்படித்தான்...
ஆளை விடு என்கிறாயே..' அது ஏன்..?
உன் நினைவின்றி என்னால் வாழ இயலாது...
உன் குரலின்றி என்னால் பேச இயலாது...
உன் பார்வையின்றி என்னால் பார்க்க முடியாது
என்றெல்லாம் தெரிந்தும்
இப்படிச் செய்கிறாயே அது ஏன்..?
இவைகளெல்லாம் செல்லக் கோபமா..?
இல்லை செல்லாக் கோபமா..? 

சத்தமில்லா யுத்தமொன்றை..!

 உன் வேல் விழிகளால்...
என் விழிகளுடன்
சத்தமில்லா யுத்தமொன்றை
செய்துவிட்டுப் போனவளே…
அந்த யுத்தத்தில்...
நான் அடியோடு வீழ்ந்து விட்டேன்..!
போர்க்கைதியாக அல்ல…
உன் மடியில்
காதல் கைதியாக..! 

உன் மீன் விழிகளை..!




என்னை மட்டுமல்ல
என் நினைவுகளையும் சேர்த்து
வசியம் செய்திருக்கிறாய் 
என்பதை…
நீ என்னருகே
இல்லாத போதுதான்
உணர்ந்து கொண்டேன்..!

                    *** + ***

பெண்ணே…
உன் மீன் விழிகளை
மூடிக் கொள்..!
மீனவன் வலையுடன்
வந்து கொண்டிருக்கிறான்..!

                    *** + ***
அழகின் சிகரம் நீ…
அறிவின் சிகரம் நீ…
பெண்மையின் சிகரம் நீ…
பேரழகின் சிகரம் நீ…
பொறுமையின் சிகரம் நீ…
பொய்மையின் சிகரம்..?
வேறு யார்… நான்தான்..!

                    *** + ***

நடமாடும் நூலகத்தைக்
கண்டேன்
நடமாடும் வங்கியைக்
கண்டேன்
நடமாடும் கவிதையைக் 
கண்டேன் என்றால்
அது நீதான் அன்பே..!

                    *** + ***

வீணை இசைக்காமலேயே
நாதம் எழுகிறதடி
உன் குதுகலப் பேச்சில்..!


                    *** + ***
 

பொன்னாபரணங்களின்றி..!




பொன்னாபரணங்களின்றி
எளிமையாக இருப்பதுதான்
உனக்குப் பிடிக்கும் என்றாய்..!
ஆயினும் பெண்ணே
உன் நெற்றியில் பூத்துள்ள
வியர்வைத் துளிகளனைத்தும்
வெண் முத்துக்கள் போன்றும்...
உன் இதழின் ஈரத்தில்
பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளி
வைரம் போன்றும் மின்னுகின்றனவே...
இந்த ஆபரணங்களை
நீ என்ன செய்யப் போகிறாய்..! 

சந்தித்துக் கொள்ளும் போது..?




உன்னை சந்திக்கும் போது
நிறைய பேச வேண்டும்
என்ற நினைப்போடு
உனை சந்திக்க வருவேன்..!
நானும் உன்னுடன்
நிறைய பேசவேண்டுமடா
என்றபடி நீயும் வருவாய்..!
நாமிருவரும்
சந்தித்துக் கொள்ளும் போது
நாம்மால் வாய் திறந்து
பேச முடிவதில்லை..!
உனை உன் வெட்கம் 
பேச விடாமல் செய்து விட…
எனை உன்னழகு
பேச விடாமல் செய்து விட்டதடி…
நான் என்ன செய்வேன்..! 

உன் கெண்டை விழிகளை..!



உன் கெண்டை விழிக் கண்ணாலே
எனை சுண்டி இழுத்தது
போதும் பெண்ணே..!
சற்றேனும் உன் கெண்டை
விழிகளை தூங்கச் சொல்...
உனைப் பார்த்ததிலிருந்து
என் விழிகள் இமைக்க
மறுக்கிறது..!
இதயமும் இயங்க மறுக்கிறது..! 

யார் பெண்ணே நீ..?




கார்மேகத்தினைப் போலிருக்கும்
உனது கருங்கூந்தல்...
அதில் மூன்றாம் பிறை நிலவு
போலிருக்கும்
உன்னுடைய அழகு நெற்றி…
அதன்கீழே
கரிய நிறம் கொண்ட
வானவில்லைப் போலிருக்கும்
உனது அழகு புருவங்கள்…
வெட்டித் தெறிக்கும் மின்னலைப்
போலிருக்கும் உன்னிரு மின் விழிகள்..
பூத்துச் சிரிக்கும்
நட்சத்திரங்களைப் போலிருக்கும்
உனது புன்சிரிப்பு…
மாலை நேரத்து செங்கதிரோனை
அளவாக வெட்டியெடுத்தது
போலிருக்கும் உனது செவ்விதழ்...
வெண்மேகப் பட்டாடை போலிருக்கும்
உனது பட்டாடை...
எதைச் சொல்ல... எதை விட...
இத்தனையும் உன்னொருத்திக்கே
ஒரு சேரப் பொருந்துகிறதே
யார் பெண்ணே நீ..?

உன் முகம் காணாத..?




உன் முகம் காணாத
ஒவ்வொரு நாளும்
எனக்கு அமாவாசை போலத்தான்..!

ஒவ்வொரு ஜென்மமும்..!



ஒவ்வொரு ஜென்மமும்
உனக்காகவே
பிறந்து  வாழத் தயார்..!
அத்தனை ஜென்மங்களிலும்
நீயே என் காதல்
மனைவியாகப் பிறப்பாயென்றால்..!

உன் சுமை கூட...


என் தோள் மீது சாய்ந்தது
மலரா..? இல்லை மலர்க்கொத்தா..?
உன் சுமையை நான்
சுகமாய்ச் சுமக்க
நீ லேசாகிப் போனாய்…உன்னோடு சேர்ந்து நானும்..!

உதாசீனப்படுத்தும் சொல் கூட..!





ச்சீ…” என்று
உதாசீனப்படுத்தும் சொல் கூட
நீ வெட்கத்தில்
உதிர்க்கும் போது
மேலும் மேலும் உன்னோடு
உறவாடத்தான் தோன்றுகிறதே தவிர...
உனை விட்டுப் பிரியத் தோன்றவில்லை..!

உன் கட்சிதானடி.!


உன் கட்சிதானடி.!


என் வீட்டுக் கண்ணாடி கூட
உன் கட்சிதானடி..!
என்னைக்
காட்டச் சொன்னால்
அது உன்னைக்
காட்டுகிறது பார்..!

Wednesday, August 7, 2013

பொய்மையும் பெண்மையிடத்து

பொய்மையும் பெண்மையிடத்து


பொய் சொல்ல மாட்டேன்


இனிமே என் கிட்டே
பொய் சொன்னா
அவ்வளவுதான்
என கடுமையாக
முகத்தை வைத்துக்கொண்டு
சொல்கிறாய்
‘சாரிம்மா இனிமே
நான் பொய்யே
சொல்ல மாட்டேன்’
என நான் மீண்டும் ஒரு
பொய் சொன்னால்தான்
நீ சிரிக்கிறாய்!





போடா பொறுக்கி
<
ஏதோ சொல்லிவிட்டதற்காக
என் முகத்தில் இனி
முழிக்காதே என
சொல்லிவிட்டாய்.
சரி இனி தினமும்
காலையில் கண்ணை
மூடிக்கொண்டே உனக்கு
முத்தம் தர வேண்டியதுதான் போல
என நான் சொன்னதும்
போடா பொறுக்கி என
செல்லமாக திட்டிவிட்டு
வேகமாக வந்து ஒட்டிக்கொள்கிறாய்
அழகான வெட்கத்துடன் !





Image Hosted by ImageShack.us

என்னைக்காவது
உண்மையை சொல்லி
இருக்கியா என
நீ கோபமாக
கேட்டபொழுது
நான் பரிதாபமாக முகத்தை
வைத்துக்கொண்டு
கோபதிலயும் நீ
அழகாத்தாண்டி இருக்கே
எனக்கூறியதும்
அதுவரை
உன் முகத்தில் நிலைகொண்டிருந்த
கோபப்புயல்
வெட்கப் புயலாக
மாறியது !





கோபமான அழகு

ஏன் அடிக்கடி
நான் கோபப்படுற மாதிரி
நடந்துக்குறே என
நீ கேட்டபொழுது
கோபமா நீ இருக்கும் போது
உன் உதடு துடிக்கிறதைப்
பார்க்க அழகா இருக்கு
அதான் என நான் பயந்தவாறே
கூறிய பொய்யைக் கேட்டு
திடீரென ஏற்பட்ட உன்
வெட்கத்தை மறைக்க
முயன்றது உண்மையாகவே
அழகாக இருந்ததடி !






ஐஸ் வைக்காதீங்க


இந்தப் புடவை
அழகா இருக்கா
என உனக்குப் பிடித்த
புடவையை காட்டி கேட்கிறாய்
அழகாத்தான் இருக்கு
ஆனா உன்னைவிட இல்லை
என நான் கூறியதைக்
கேட்டு ‘போதும் ரொம்ப
ஐஸ் வைக்காதீங்க’
என என் பொய்யை
ரசித்துக்கொண்டே
சொல்கிறாய்

பின் எப்படி பார்ப்பதாம்?

பின் எப்படி பார்ப்பதாம்?


மஞ்சள் தேவதை




உன்னை முதன் முதலில்
அந்த மாம்பழ நிற
பட்டுப்பாவாடையில் பார்த்ததும்
எனக்குத்தோன்றியது
தேவதைகள் வெள்ளை
உடைகளில் தான்
வரவேண்டுமா என்ன ?





எப்படி இப்படி







கோவிலுக்கெல்லாம்
இப்படி வராதே
பார்
வருபவர்களெல்லாம்
உன்னைப்
பார்த்து கன்னத்தில்
போட்டுக்கொள்கிறார்கள்




அம்மன்



முதலில் இப்படி
பார்ப்பதை விடு
என்கிறாய்
கர்ப்பகிரகத்துக்குள்
இருக்கும் என்
தெய்வத்தை
பின் எப்படி
பார்ப்பதாம் ?



பாவம் அம்மா




இப்பொழுதெல்லாம்
கோவிலுக்கு
தவறாமல் வருகிறேன்
எனக்கு பக்தி
வந்து விட்டதென
என் அம்மா மிகுந்த
ஆனந்தப்படுகிறார்கள்
பாவம் அவர்களுக்கு
தெரியாது
என் பக்தி
கர்பகிரகத்துக்குள்ளிருக்கும்
அம்மனுக்காக அல்ல
அதைச் சுற்றிக்
கொண்டிருக்கும்
அம்மனுக்காக
என!



அப்படி பார்க்காதே




அப்படிப் பார்க்காதே
எனக்கு வெட்கமாக
இருக்கிறதென
முகத்தினை திருப்பிக்
கொள்கிறாய்
இருப்பினும்
என்னை நோக்கி
சிரிக்கிறது
எனக்கான உன்
உன் வெட்கம் !









அன்று
என் எதிர் வீட்டு
குழந்தையை நீ
கொஞ்சிக்கொண்டிருந்த
போதுதான்
தவழ ஆரம்பித்தது
உன்னை நோக்கி என்
மனது !








நம் பயணத்தில்
திடீரென குறுக்கே
வந்துவிட்ட
அந்த
மிதி வண்டிக்காரனை
என்னால் திட்ட
முடியவில்லை
வாழ்த்தத்தான்
தோன்றுகிறது
நீ என்
பின்னால் அமர்திருக்கும்
வேளைகளில் 

Friday, June 21, 2013

என்னை கவர்ந்த சிலவற்றை உங்களையும் கவரும் என்ற நம்பிக்கையில் . . .

காதல் காதல் காதல் காதல் காதல் காதல் ...
மொபைல்...



ஏன் இன்னும் இந்த பழைய
மொபைலையே வைத்துக்கொண்டு
மாரடிக்கிறே என கேலிபேசும்
நண்பர்களிடம் இதுதான்
நீ முதன்முதலில் கொடுத்த
முத்தம் சுமந்த மொபைல்
என கூறமுடியுமா ?


போதை...
நீதான் குடித்திருக்கிறாயே
எதில் அதிகம் ‘கிக்’ ?
என ஒருபக்கம்
தலையை சாய்த்து
கேட்ட போது
ஏறியது போதை எனக்கு


ஒரேயொரு ‘சிப்’ குடித்தால்
போதையேருமா
என கேட்கிறாய்
அதெல்லாம் உன்
இதழ் ’கள்’ குடித்தால்
மட்டுமே சாத்தியம் !

இதழ்கள்



எத்தனை முறை
படித்தாலும் மேலும்
மேலும் படிக்கத்
தூண்டுகிறது
உன் இதழ்கள் மட்டும்தான் !



ச்சீய் ...
இதைப் போயெல்லாமா
ரசிப்பார்கள் என கேட்கிறாய்
உனக்கென்ன தெரியும்
உன் ஈரமான இதழ் வரிகளின்
அழகு !!


அம்மன்...

மஞ்சள் தேவதை
கோவிலுக்கெல்லாம்
இப்படி வராதே
பார்
வருபவர்களெல்லாம்
உன்னைப்
பார்த்து கன்னத்தில்
போட்டுக்கொள்கிறார்கள்



இன்னும் என்னவெல்லாம்
கொள்ளையடிக்கப்
போகிறாயோ எனக் கேட்கிறாய்...
உன்னிடம் கொள்ளையடிக்க
என்னடி இருக்கிறது உன்
அழகான வெட்கங்களைத்தவிர....?





Thursday, June 13, 2013

வைர முத்துவின் காதல் கவிமழை!


வைரமுத்து காதல் கவிதை











By A.VIGNESH
அன்பே !
அந்த நதிக்கறையில்
உன் கைக்குட்டை ஒன்றைக்
கண்டெடுத்தேன் !
அது கைக்குட்டையா?
இல்லை
காதல் தேவதை
தன் ஒரு சிறகை
உதிர்த்து விட்டுப்
போய் விட்டதா?

இது கைக்குட்டைதானா?
இல்லை
கல்யாணப் புடவைக்கு
அச்சாரமா?

நீ
வித்தியாசமானவ
ள்
காதல் கடிதத்தை
நெசவு செய்து அனுப்பியவ
ள்
நீ மட்டும்தான்

இப்படித்தான்
பேச நினைக்கிறேன்
ஏதேதோ அர்த்தத்தில்
ஆனால் என் வார்த்தைகளோ
மௌனத்தின் கர்ப்பத்தில்
------------------------------------------------------------------------
By A.VIGNESH
என் இனியவளே !
உனக்கு என் நன்றி !
உன்
பார்வையின் கிரணங்கள்
விழாமலிருந்தால்
இந்த இலை
ஒளிச் சேர்க்கை செய்யாமலே
உதிர்ந்திருக்கும்.

.....................................................

என் பெயரே
எனக்கு மறந்து போன
ஒரு
வனாந்தரத்தில்
என்னைப்
பெயர் சொல்லி அழைத்தது யார்?
நீயா ?
 
.....................................................

என்னை
ஒரு
மின்னல் கீற்று
என்றல்லவா நினைத்திருந்தேன்?
நீ எப்படி அதில்
நிரந்தரப் பாய் முடைந்தாய்?
 
.....................................................


முதலில் –
சப்தங்களுக்கே அர்த்தம்
சரியாய் விளங்கவில்லை.
இப்பொழுதோ –
மௌனத்திற்கும் கூட
உரையெழுத முடிகிறது.
 
.....................................................
உனக்குத் தெரியுமா?
உன்
அழகுப் பெயரை யாரோ கொஞ்சம்
அழுத்தி உச்சரித்ததால் அழுதிருக்கிறேன்.
 
.....................................................

கண்ணே !
இனி நாம்
தாஜ்மஹாலில்
சந்திக்க வேண்டாம்
ஏனெனில்
இங்கே
ஒரு பணக்கார மன்னன்
ஏழைகளின் காதலை
ஏளனம் செய்திருக்கிறான்.

யாரவள்? - வைரமுத்து காதல் கவிதை
By A.VIGNESH
அவள் யார்?
யாரவள்?
இந்தக் கிராமத்து நுழைவாயில்
என்னை வரவேற்க வந்த வானவில்லா?

விடிந்தும் விடியாத இரவை
இன்றுதான் பார்த்தேன்
நான்
அவளின் கண்களைச் சொல்கிறேன்!

கிளி வந்து இன்னும்
கொத்திச் செல்லாத அத்திப் பழங்கள்
நான்
அவளின் இதழ்களைச் சொல்கிறேன்!

பளிங்குத் தரையில்
அள்ளி இறைத்த
வெள்ளிக் காசுகள்
நான்
அவளின் சிரிப்பைச் சொல்கிறேன்!

போகப் போக
என் டைரியின்
எழுதப்படாத பக்கங்களிலெல்லாம்
இதை விட
இன்னும் சொல்கிறேன்!





வைரமுத்து காதல் கவிதை

பன்னிரண்டு பாலைவன 
வருஷங்களுக்குப் பிறகு
அவளை 
அவன் பார்க்க நேருகிறது.
எங்கெனில்..
ஒரு ரயில் நிலையத்தில்.

எப்போதெனில்..
ஒரு நள்ளிரவில்.

எதிரெதிர் திசையில் 
செல்லும் ரயில்கள் இளைப்பாறிக்
கொள்ளும் அந்த இடைவெளியில்..

ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில்
பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன.

அப்பொழுது-
மனசில் எத்தனை மௌன பூகம்பம்!


உன்னைப் பார்த்த
ஒரு நிமிஷத்தில்
இமைகளைக்
காணாமல் போட்டு விட்டன
கண்கள்.


நீதானா?
இல்லை-
வேறொருவன் கண்களால்
நான்
பார்ககிறேனா?மனசின் பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு
பிரவாகம்.

இதயத்தின்
ஆழத்தில் கிடந்த
உன்முகம்
மிதந்து மிதந்து
மேலே வருகிறது.

ஓ!
வருஷங்கள் எத்தனையோ
வழிந்த பிறகும்..
என்
மார்பு தடவும்
அதே பார்வை..

அதே நீ!

என் பழையவளே!

என்
கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே!

உன் நினைவுகளில்
நான்
எத்தனையாவது பரணில்
இருக்கிறேன்?அறிவாயாஎன்
மீசைக்கும்
என்
காதலுக்கும்
ஒரே வயதென்று
அறிவாயா?உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரை கூடத்
தோற்றுப் போனதே!

ஓ!
நீ மாறியிருக்கிறாய்.
உன்
புருவ அடர்த்தி
கொஞ்சம்
குறைந்திருக்கிறது.

உன்
சிவப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன்
இதழ்களில் மட்டும்
அதே
பழைய பழச்சிவப்பு.

இப்போதும்
நாம்
பேசப்போவதில்லையா?வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?உன் நினைவுகள்
உன் கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம்.
ஆனால்
என் நினைவுகள்
உன்னைப் போலவே
விழித்திருக்கின்றன.

ஓ!
இந்த
ரயில் வெளிச்சம்
நீ
அழுவதாய் எனக்கு
அடையாளம் சொல்கிறதே!
வேண்டாம்!

விழியில் ஒழுகும்
வெந்நீரால்
மடியில் உறங்கும்
உன்
கிளியின் உறக்கத்தைக்
கெடுத்து விடாதே!

இதோ
விசில் சத்தம் கேட்கிறது
நம்மில் ஒரு வண்டி
நகரப் போகிறது.

போய் வருகிறேன்!
அல்லது
போய்வா!
மீண்டும் சந்திப்போம்!
விதியை விடவும்
நான்
ரயிலை நம்புகிறேன்.

அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்!

"
நீயும் என்னைக்
காதலித்தாயா?



By A.VIGNESH
கண்ணே !
நான் வேதம் ஓத
ஆசைப்பட்டதே
கடவுளைக் காண அல்ல
கண்மணி !
என் காதலியே !
உன்னைக் காண.

நானோ
ஒரு அரசன் தானம்
கேட்பது போல் யாசிக்கிறேன்
நீயோ
நீச்சல் தெரியாத ஒருத்தி
குளத்தில் குதிப்பது போல்
யோசிக்கிறாய்

அது எப்படி?
உன் குடத்தில் இருந்து தண்ணீரும்
வாயிலிருந்து வார்த்தைகளும்
சிந்துவதேயில்லையே !

ஒரு வார்த்தை சொல்லி விடு !
உன் சொல்லுக்குப் பிறகுதான்
இந்தப் பிரபஞ்சம்
அசைவதா? இல்லையா?
என்று ஆலோசிக்கும்.